கருங்கல் சுவரே
கருங்கல் சுவரே
கருங்கல் சுவரே
கருப்பு இதயம் கொண்ட
கருங்கல் சுவரே
மனிதன் மனிதனை தீண்ட
மறைவு வேலியா
மரியாதை கொடுக்காத மனித நேயம்
உலகில் இனி தேவையா
எதைச்சொல்லி நான் அழுவேன்
ஏழைக்கண்ணீர் ஏளனம் தானோ
நடுநிசி ராத்திரில
உயிர் பசி தீர்த்தாயோ
உறவுகளை நீ மறந்து
கனவுகளை சிதைத்தாயோ
மனுகொடுத்து ஏற்கலயே
இவரும் மனிதர்தான் என பார்கலேயே
அரசு ராசாக்கலே ஓடி வந்தீரோ
புதைந்த உயிரை தேடி வந்தீரோ
இருந்த வீடெல்லாம் இடிஞ்சி போச்சி
எரிந்த தீபமெல்லாம் அணைஞ்சி போச்சி
தீண்டாமை இன்னும்
உயிர் வாழுது
மனித நேயம்தான்
இறந்து போனது
இனி தீணடாமை
இறக்க வேண்டும்
புதிய தீப்பந்தம் எடுத்து
கொளுத்த வேண்டும்...
BY ABCK