பெண்களின் நிராசை
வரம் மட்டும் ஒன்று எனக்கு கிடைத்திருந்தால்
பெண்கள் அனுபவிக்கும் குருதிப் போருக்கு
என்றோ விடுதலை வாங்கி இருப்பேன்.
ஆனால், அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும்
அந்த பேரன்பை அழிக்க மனமில்லாமல்.
இந்த மனித குலத்தை காக்க
ஒவ்வொரு மாதமும் வலியையும், ஏளனத்தையும்
சிரித்துக் கொண்டே போராடும் பெண்மையை போற்றுவோம்.