வியப்பாய் இருக்கிறது

பரம்பொருளே

ஆம் வியப்பாகத்தான்
இருக்கிறது

கலியுகத்தின் பொருள்
அதனை நான் புரிந்துகொண்டு
விட்டேன்

அதை உன்னிடம் பகிரத்தான்
நான் வந்துகொண்டிருக்கிறேன்

ஓ.... என்ன பிதற்றுகிறேன் நான்

நீ என்னை அழைத்த பிறகு
வராமல் என்ன செய்வது

என்னை இங்கே தனியே விட்டுவிட்டு
எல்லோரும் ஆக வேண்டிய வேலைகளை
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

என்னைப் அப்புறப்படுத்த வேண்டுமே

அழுகை இல்லை
கதறல்கள் இல்லை
சோகமான சூழ்நிலை துளியும் இல்லை

அன்றாடம் போல் இந்த நாளும் நகர்கிறது


நடக்கும் எல்லாவற்றையும் நானும்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்

எனக்கு விசித்திரமாக இருக்கிறது
உன் படைப்பில் இப்படியா ???

சிருஷ்டி கர்த்தாவான நீயும் மாறிவிட்டாயா

மனதளவில் எல்லோரும் மாறிவிட்டார்கள்
மன முதிர்ச்சி பெற்று விட்டார்கள்

நமக்கு தெரிந்தா நம் பிறப்பு நடக்கிறது, அல்லது
நமக்கு தெரிந்தா நம் இறப்பும் நடக்கிறது

வந்தோம்..... போகிறோம் .......

இதற்கு ஏன் அல்லோலப்படவேண்டும்

இன்று இவர் போகிறார் என்றால்
நாளை நாமும் போகப்போகிறோம்
அவ்வளவு தானே

என்கிற மன வலிமை பெற்று விட்டார்கள்

அடுத்தடுத்த வேளைகளில்
கவனம் செலுத்திக்கொண்டு
இருக்கிறார்கள்
இந்த அவசர யுகத்தில்

நடப்பது எல்லாம் சரிதானா

என் மனம் வலிமை பெறவில்லையா
அதனால் தான் எல்லாமே விசித்திரமாக
தெரிகிறதோ

இவை எல்லாவற்றையும் என்னால்
சகித்துக்கொள்ள முடியாது என்று தான்
என்னை அழைத்தாயோ

இப்பொழுது நீயே எனக்கு வியப்பாகத்தான் தெரிகிறாய்

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது

நீயாவது உன்னை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (12-Dec-19, 4:52 pm)
பார்வை : 46

மேலே