தத்துவம்
உயிர் ஆன்மாவிடம் கேட்டது
'உடல் அழியும்போது உயிரும்
போய்விட, நீ எங்குபோவாய்
சொல்வாயா ..... ஆன்மாவே'
ஆன்மா சொன்னது ....'உயிரே
வேறு உடல் தேடி.... 'அவன்'
இட்ட வழியில் ..... என்றது
உயிர் வேறு.... உடல் வேறு
அதை ஆட்டிவைக்கும் அது வேறு
என்ன விசித்திர இவையெல்லாம் !