கேள்வி தொடுக்காதீர்கள்

வசந்தம் வீசவில்லை
வாழ்க்கை மணக்கவில்லை.
வலியோடு தினம் வாழ்க்கை
அதனால் வாழ்வும் பிடிக்கவில்லை.

ஏமாற்றமே ஏணியாவதால்
இவ்வுலகம் பிடிக்கவில்லை.
இன்பம் கரைந்து துன்பம்
கொடையாவதால்
பூலோகம் பிடிக்கவில்லை.

கண்களிலே கண்ணீர்
மட்டும் நிரந்தரமானதால் .
கண்களும் பிடிக்கவில்லை.

மனமோ வாடிய முல்லை.
ஆறுதல் கூறிடுவோரும் இல்லை.
நிரந்தர உறவும் இல்லை.
நிலையான அன்பும் இல்லை.

எவரையும் பிடிக்க வில்லை.
எதுகும் பிடிக்கவில்லை.
உரையாடலும் பிடிக்கவில்லை.
ஏன்? என வினா தொடுக்காதீர்கள்.
பதில் என்னிடம் இல்லை.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:19 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 186

மேலே