இயற்கை

திடீரென்று வானம் மூடியது
வாடைக்காற்று அடிக்க
கூடவே வந்தது ஓர் மழை
மழைத்தூறலுடன் கலந்துவந்து
விழுந்தன பனிக்கட்டிகள் ....
சிறியதும் கொஞ்சம் பெரியதுமான....
என் கற்பனையும் வேகமானது....
இந்த பனிக்கட்டி மழைக்கு பதில்
தங்கக்கட்டி வந்து மழைத்தூறலாய்
வந்து விழுந்தால்.....என்ன ஆகும்....????
மனம் சொன்னது.... வேறென்ன
'ஹெல்மெட், ஜாக்கெட் அணிந்து
கடல்போல் பெருகிவரும் மக்கள் கூட்டம்
கட்டுக்கடங்கா சுனாமியாய்........
மழை மண்ணை நனைக்கும்....
தங்கக்கட்டி விழுந்தால் .......
ஒரு போறே நடக்கும் வீதியில்...
சில பலர் உயிர் இழப்பர் ......

அதனால்தான் இறைவன்
;' தங்க மழை' இன்னும்
பெய்ய வைக்கவில்லை !
அர்த்தமுள்ள இயற்கையின் நியதிகள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Dec-19, 8:28 pm)
Tanglish : iyarkai
பார்வை : 332

மேலே