யார்தடுத்தாலும்
வடித்து வைத்த சிற்பம் உயிர்
கொண்டு வந்ததோ
படைத்துவிட்ட பிரம்மன் அவன்
வரம் வேண்டி தந்ததோ
எடுத்துக்கொள்ளத் தோணுதே
யார்வீட்டு சொத்து இது
உரியவர் என்ற உறவில் எவரேனும்
இருந்தால்
வறியவன் போல்போய் யாசகம்
கேட்பேன்
மறுத்து ஏதேனும் பேச்சு வந்தது
என்றால்
ராவணன் போல சிறையெடுப்பேன்
யார் தடுத்தாலும்