காதல்

உன்னை முதல் முதலாய்
நான் பார்த்தபோது நீ
பார்த்தப்பார்வை நேர்கொண்ட பார்வை
இப்பார்வையின் பரிவர்த்தனையில்
பிறந்ததே நம்மிடையே காதல்
இப்போது நான் உன்னை பார்க்கையில்
நீயோ தலைகுனிந்தாய் நாணத்தில்
அன்று நிமிர்ந்திருந்த தலை
இன்று குனிததேனோ என்று நான்
அவளைக் கேட்க , அவள் இன்னும் கோணி
மண்ணில் ஏதோ கோலம் வரைந்தாள்
பேசாது மௌனமாய் புன்னகைத்து
அவள் முதல் பார்வை இலக்கணம்
காதலுக்கு , அதில் இலக்கியமானது
இந்த பெண்ணிற்கே உரிய நாணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Dec-19, 1:31 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே