பேராசிரியை ரேவதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவி

17.12.19
உங்களுக்கு அது பிறந்தநாள்
எங்களுக்கு அது சிறந்த நாள்

ரதியை பெற்றெடுத்த
ரதி நீ
பேச்சாக
தமிழருவி
ஊற்றெடுக்கும் நதி நீ

யாருக்கும்
செய்வதில்லை சதி நீ
பெண் உருவில்
பிறந்த மதி நீ


ரேவதி நட்சத்திரத்தில்
பிறந்த ரேவதியே
ராஜன் ராஜராஜன்
ஆனார் ஆனதால் உன் பதியே

நீ பிறந்தது சென்னை
உன் மனமோ
பிறர் துன்பம் கண்டு உருகும் வெண்ணை
உயிராக நேசிப்பதோ
தாய் மண்ணை
உன் பேச்சாற்றலால் ஒருநாள் தொடுவாய் புகழ் விண்ணை
உலகம் ஒருநாள்
திரும்பிப் பார்க்கப் போகிறது உன்னை
அப்போது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்னை

நீ கங்காதரன்
தோற்றுவித்த தமிழ் கங்கை
விருதுகள் பல பெற்ற
சாதனை மங்கை

இறைவன் உன் அறிவில்
மதியை வைத்தான்
உன் முகத்தில்
மதியை வைத்தான்
உன் அகத்தில்
நிம்மதியை வைத்தான்

நீ பிள்ளைகளுக்கு அக்கறையாய் சொல்லிக் கொடுக்கின்றார் பாடம்
அக்கறை இல்லாத பிள்ளை காயம் பாடம் சொல்லிக் கொடுத்து அக்கரை சேர்க்கின்றாய் நீ ஒரு ஓடம்

தமிழ் அருவியே
நீ ஊர் ஆண்டும் நூறாண்டும்
இப்பராண்டும் வாழ அன்போடு
வாழ்த்துகிறோம்..

எழுதியவர் : குமார் (16-Dec-19, 5:18 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 470

மேலே