உயிரே உதிர்ந்ததடி

கம்பியைப் பழுக்கக் காய்ச்சி
நஞ்சினை முழுக்கத் தடவி
நெஞ்சினுள் ஆழச் சொருகி
நீர் வீழ்ச்சியில் தூக்கி எறிந்த
நிலையைப் போல் இருந்ததடி
நீ சொன்னக் காதல் மறுப்பு
கருமையான வெய்யில் காலத்தில்
கருவேலன் மரத்து முள்ளை
கட்டுக்கட்டாய் எடுத்து வந்து
கட்டாந்தரையில் பரப்பி விட்டு
கயிற்றால் கையை காலைக் கட்டிப்போட்டு
உருட்டி விட்டு இரசித்ததைப் போல்
உயிரைச் சிதைத்ததடி உன்னுடைய ஒரு வார்த்தை.
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Dec-19, 9:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1077

மேலே