நான் காதலித்த பெண்

நான் காதலித்த பெண்ணைப்பற்றி
தெரிந்துகொள்ளுங்கள்..
காதலித்தபொழுது உதாசீனப்படுத்தி
காலம்கடந்தபின்பு
காதல் சொன்னவள்..
காதலென்றால் பெருங்காதல்..
உண்மையில்
உதறிய பின்பே நான்
அவளால்
கவரப்பட்டிருக்கிறேன்..
விட்டுவிலகி வெகுதூரம் சென்றநான்
அறியவில்லை..அவளை
நெருப்பினில் தள்ளி
பொசுக்கிக்கொண்டிருக்கிறேன்
என்று..
நஞ்சுபோல் அவளுள்
பரவிவிட்டதாய்
பின் ஒரு வலிமிகுந்த
சந்திப்பினில் கூறினாள்.
சாபம்கூட கொடுத்தாள்..
மறுநாள்
இரவுமுழுக்க உறக்கமில்லை
என குறுஞ்செய்தி அனுப்பினாள்.
மகத்துவமான காதல்
அவளுடையது.
பின் எப்பொழுது சந்திப்பினும்
சகோ என்பாள்..
கண்சிமிட்டி சிரிப்பாள்..
அவள் காதல் என்றும்
அழியாதென்பாள்..
நான் தூரத்து மலைச்சிகரமென
உவமை சொன்னாள்..
விரட்டிவிட்ட காதலுடன்
இன்னும் என்னைக்காதலிக்கும்
என்
முன்னாள் காதலி
எப்பொழுதும்
தனித்துவமானவள்..

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (22-Dec-19, 8:31 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 240

மேலே