என் முகத்தை தடவிக்கொடுக்கையில்
ஜன்னல் திறந்து வெட்டவெளியில் ஒற்றை
மரத்தை பார்த்து இரசிக்கிறேன் ...
ஓணான் ஒன்று- விழுந்து
எழுந்து தவழ்ந்து விளையாடியது....
எழுந்து தவழ்ந்து விளையாடியது....
மரக்கிளை ஒன்று
கரங்களை நீட்டி வாரி அனைக்கிறது...
தூரப்பார்வையை கிட்டப்பார்வையாய்
உருமாற்றி தாய்மையை தடவிப்பார்கிறேன்...
சாளரத்தின் ஓட்டைவழியே
ஊடுருவிய மெல்லிய
ஒளிக்கதிர் - என் முகத்தை
தடவிக்கொடுக்கையில்..
திடுக்கிட்டு கண்விழித்தேன்
கனவில் கண்டது
நிஜத்தில் நினவாகுமா
என்ற ஏக்கத்துடன்