என் முகத்தை தடவிக்கொடுக்கையில்

ஜன்னல் திறந்து வெட்டவெளியில் ஒற்றை
மரத்தை பார்த்து இரசிக்கிறேன் ...


ஓணான் ஒன்று- விழுந்து
எழுந்து தவழ்ந்து விளையாடியது....

மரக்கிளை ஒன்று
கரங்களை நீட்டி வாரி அனைக்கிறது...

தூரப்பார்வையை கிட்டப்பார்வையாய்
உருமாற்றி தாய்மையை தடவிப்பார்கிறேன்...

சாளரத்தின் ஓட்டைவழியே
ஊடுருவிய மெல்லிய
ஒளிக்கதிர் - என் முகத்தை
தடவிக்கொடுக்கையில்..

திடுக்கிட்டு கண்விழித்தேன்
கனவில் கண்டது
நிஜத்தில் நினவாகுமா
என்ற ஏக்கத்துடன்

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (23-Dec-19, 8:04 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 144

மேலே