நிலையறிவாயோ நிலவே

நிலையறிவாயோ நிலவே. . .

நிலையறிவாயோ நிலவே. . .
நினைவுகள் நித்தம்
கனவுகள் மொத்தம்
நீக்கிட நினைத்தாயோ - அல்ல
நீங்கிட நினைத்தாயோ
தொலைத்திட துணிந்தாயோ-அல்ல
தொல்லையென நினைத்தாயோ
நிமிடம் நீங்கா பேச்சு
நினைக்க நிமிடமில்லாமல் போச்சு
தொலைவு கொடுக்கிறது
நீள் நினைவு
கசந்ததோ அல்ல
கலைந்ததோ தேய்கின்றேன்
நோயில் வாழ்கின்றேன்
புரிவாயோ புன்னகை சொரிவாயோ
அருள்வாயோ ஆனந்தம் தருவாயோ
எதிர்பார்ப்பில் என்றும் நான்.

இவன். மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (24-Dec-19, 11:59 am)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 178

மேலே