கீரனும்பிழை காணமுடியா தமிழ்க்கவிதையே

கனவில் மிதக்கும் விழிகளோ
காற்றில் மிதக்கும் குழலோ
இதழில் மிதப்பது தேனோ
நெஞ்சில் தவழும் நிலவோ !

அந்தியில் கவியும் அழகோ
ஆலயக் கோபுரச் சிலையோ
மார்கழி வரையும் இழைக்கோலமோ
மங்கையாய் வீதியில் வந்ததோ !

தென்றல் வீசிடும் வீதியில்
தாவணித் தென்றலாய் வருபவளே
மன்றம் பொலிந்துவரும் மாமதுரையில்
கீரனும்பிழை காணமுடியா தமிழ்க்கவிதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-19, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே