கீரனும்பிழை காணமுடியா தமிழ்க்கவிதையே
கனவில் மிதக்கும் விழிகளோ
காற்றில் மிதக்கும் குழலோ
இதழில் மிதப்பது தேனோ
நெஞ்சில் தவழும் நிலவோ !
அந்தியில் கவியும் அழகோ
ஆலயக் கோபுரச் சிலையோ
மார்கழி வரையும் இழைக்கோலமோ
மங்கையாய் வீதியில் வந்ததோ !
தென்றல் வீசிடும் வீதியில்
தாவணித் தென்றலாய் வருபவளே
மன்றம் பொலிந்துவரும் மாமதுரையில்
கீரனும்பிழை காணமுடியா தமிழ்க்கவிதையே !