அவள் புலம்பல்
உன் பார்வை தந்த கண்ணொளிக்கு
மயங்கி உன்னை நாடி வந்த நான்
இப்போது விளக்கொளிக்கு மாட்டிய
விட்டில்போல் ஆனேனே உன்னை விட்டு
பிரிய முடியாது ...... உன் வலையில் நான்
நீயார் என்று கண்டுகொண்டேன் கண்ட பின்னும்
உன்னிடமிருந்து பிரிய முடியலையே ......
என்னை மீட்க வருவானோ ஒருவன்
காத்திருக்கிறேன் துன்பத்திலும் கனவு கண்டு