புத்தாண்டு வரவேற்பு

காட்டிலும் மலையிலும் கலந்துறவாடி,
நுரைக்கடல் தென்றலை கைகளிலேந்தி ,
முற்றத்தில் மல்லியின் மணத்தோடு,
முகப்பில் மாவிலை தோரணமுமாய்,
இல்லமெங்கும் நறுமணம் சூழ,
சுற்றமும் நட்பும் கூடிமகிழ்ந்திட,
நாடும் வீடும் நலம்பெறும் ,
நற்செய்தி பேழையை சுமந்து,
கல்வியும் தொழிலும் மேன்மையுற,
கலைத்தாயை கையோடு கூட்டி ,
புதுமைகள் பல படைத்திட ,
பூத்துவா புத்தாண்டே !!!

எழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (2-Jan-20, 10:11 am)
பார்வை : 285

மேலே