ஹைபன் கவிதை

அழியாக் காதல்
------------------------------

காதல் கன்னி அனார்கலி
உயிருடன் சமாதியானாள்
சாம்ராட் அக்பரின் ஆணையில்
கல்லறைமேல் புலம்பி அழுகிறான்
இளவரசன் சலீம் ..... அடங்கா துயரில்
முடிவில் அவன் கல்லறை மேல்
அடித்து ஓர் சத்யவாக்கு விடுகின்றான்
அதுதான்,' அன்பே அனார் உன்னை
உயிருடன் புதைத்து மாய்த்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல் அழியாது
காதலர் நாம் அழிந்தாலும்
காலத்தால் அழியாது நம் காதல் கண்ணே
சூரிய சந்திரர் உள்ளவரை வாழ்ந்திடும்
நம் காதல் ......... என்று கூறி
கல்லறைமேல் கண்ணீர் விடுகிறான்
மயங்கி விட...... காவலர் வந்து
அங்கிருந்து இளவரசன் சலீமை
அக்பரின் ஆணையில் இழுத்து
சென்று விடுகின்றனர் .....

அழிக்க முடியாதது
உருவேதும் இல்லாதது
உண்மைக் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jan-20, 3:05 pm)
பார்வை : 127

மேலே