தென்றல்

தென்றலாய் மென்மையாய்
வீசும் காற்று .....
சோலையில் ஒவ்வோர்
பூச்செடியையும் தொட்டு
மலர்களைத் தடவி
அவைகளின் மனத்தை
தன்னுள் வாங்கி வானில்
வாசம் பரப்புகிறது ..
தென்றல் காதலர் இடையே
அலையும் காதல் தூதுவன்
இப்படி மென்மையே உன்
பெயர்தான் தென்றலோ
என்றால் தென்றல் ஓடிவிடுகிறதே
எதன்மீதும் ஒட்டாது
தொட்டவரையும் விட்டுவிட்டு .....

மனமே உனக்கு மட்டும்
ஆசையை விட முடியலையே
பார்க்கும் பொருள் மீதெல்லாம்
ஒட்டிக்கொள்கிறதே...
மீள முடியாது !

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Jan-20, 2:59 pm)
Tanglish : thendral
பார்வை : 198

மேலே