காலம் கடந்த சில நினைவுகள் 555
என்னுயிரே...
ஆண்டுகள் சில கடந்து
நீண்ட
நாட்களுக்கு பிறகு...
நாட்களுக்கு பிறகு...
நீயும் நானும்
சந்தித்து கொண்டோம்...
ஆற்றங்கரையில் அமைதியான
அந்திசாயும் வேளையில்...
அவரவர் நினைவுகளை
தொலைத்துவிட்டு...
தனிப்பறவையாய்
தவித்து நின்று...
இறந்த காலத்தை
நினைத்து பார்க்கிறோம்...
பட்டாம் பூச்சியாய்
சிட்டுக்குருவியாய்...
காதல் வானில்
சுற்றி
திரிந்த அந்த நாள்...
திரிந்த அந்த நாள்...
நினைவுகள் கனவுகளில்
கூட கலைந்துவிட்டன...
காலமும் கரைத்துவிட்டன
அழகிய நினைவுகளை...
இன்று உன் பாதையும் என்
பாதையும் வெவ்வேறு திசையில்...
சில நேரங்களில்
சில நினைவுகள்...
தென்றலாக நம்மை
தழுவித்தான் செல்கிறது...
சுகமான நினைவுகளை.....