குயில் பாட்டு

அன்று அந்த சோலைக் கருங்குயில்
ஏனோ ஓயாது கூவிக் கொண்டே இருந்தது
அதன் கூவலில் புதுப்புது ராகங்........
கேட்போர் மனதில் வந்து ஒலித்தது இசையாய்
தெய்வீக இசையாய்....... ஆனால் அந்த குயிலோ
அப்படிக் கூவியது அதன் மனதின் ஓரத்தில்
தேங்கி இருந்த ஆதங்கம் அதைத் தாக்க...
குயில் நினைத்தது.' இப்படி மனிதர் மனதை
மயக்கும் இசையை என்னுள் இயக்கிவைக்கும்
இறைவன், எனக்கேன் அந்த அழகு வெள்ளை
அன்னம்போல் எழில் உருவம் தரவில்லை? '
இந்த எண்ணம் தான் அந்த குயிலை இப்படி
கூவ வைத்ததாம் அதுவே அதன் ஆதங்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jan-20, 2:29 pm)
Tanglish : kuil paattu
பார்வை : 112

மேலே