ஒரு நினைவு
நான் அமர்ந்திருத்த
மரப்பலகை
அந்த பூங்காவில் இன்னும்
அப்படியே இருக்கிறது.
உன்னோடு அந்த பூங்காவில்
பலமுறை நடந்திருந்தாலும்
ஒரே ஒரு நாள்
அந்த மரப்பலகையில் நாம்
அமர்ந்திருந்தபொழுதில்தான்
அதனை நடத்தினாய்..
எதிர்பாராத்தருணத்தில்
முத்தமொன்றை தந்துவிட்டு
நாம் பிரிந்துவிடலாம்
என்றாய்.!
உன்னை காதலித்துவிடுவேனோ
என அஞ்சுகிறேன்
உன் அருகாமையின் இன்பத்தினை
ஆழமாக மனம் ரசிக்கிறது
உன் பேச்சும் சிரிப்பும்
உன்னிடம் வீழ்ந்துவிடச்சொல்கிறது..
ஆகையால்
அசம்பாவிதத்தைத்தவிர்க்க
நாம்
பிரிந்துவிடலாம் என்றாய்..
உன முத்தத்தாக்குதலில்
நிலைகுலைந்திருந்த நான்
ஒருகணம் குழம்பிப்போனேன்..
இவ்வளவு காதலிப்பவள் ஏன்
பிரிகிறாள் என்று??
உன் காதலின் பயத்தால்
நீ துன்பமுறுவதை நான் விரும்பவில்லை
பிரிந்துவிடலாம் என்றேன்
................
இப்படியாக என்காதல்
தொடங்கிய இந்தமரப்பலகை
இன்னும்
அப்படியேதான் உள்ளது..
யாரோ இருவர்
காமம் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்..
Rafiq