ஆயகலை அறுபத்து நான்கினுக்கும் தாய்

ஆயகலை அறுபத்து நான்கினுக்கும் தாய்!!
தூயவெண் பட்டாடை, தொன்தமிழ்நூல் ஏந்துகரம்,
மாயவண் ணிசைமீட்டு மாசறுயாழ் வலதுகரம்,
தேயவன் னப்பேடை தேவியுவர் வாகனமாம்,
மாயவன் னகத்தேவன் நான்முகனின் நாயகிதன்,
ஆயநன் கலையாறு பதுநான்கின் ஆழிதமிழ்த்
தேயரவர் திருநாவில் நின்றாடும் கலைவாணித்
தாயவள் விழியருளைத் தாள்பணிந்து ஏந்துவமே !!

- செல்வப் ப்ரியா – சந்திர மெளலீஸ்வரன் மகி.
11 ஜனவரி 2020 – திங்கள்கிழ்மை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Jan-20, 11:44 am)
பார்வை : 255

மேலே