என் நினைவெல்லாம் நீதானடி 555
ப்ரியமானவளே...
நீ கல்லூரி வராத
நாட்களிலெல்லாம்...
என்னுடன் பலர் இருந்தும்
நான் தனிமையை உணர்வேனடி...
உன்னுடன் நான் பேசியது
இல்லையடி ஒருமுறைகூட...
என் நினைவெல்லாம் அன்று
இருந்தது நீ மட்டும்தானடி...
தினம் என் பெயரை
பலர் உச்சரிப்பதுபோல்...
தினம் தினம்
ஏதேனும் ஒரு நிகழ்வு...
உன்னை எனக்கு
நினைவுபடுத்துதடி...
உன்னை நினைப்பதற்கும்
மறப்பதர்க்கும்...
நான் முயற்சி
செய்ததில்லை...
ஏனோ
என் நெஞ்சின் ஓரத்தில்...
நீ இன்னும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்...
அந்த கல்லூரியில் தினம் மலரும்
முல்லை மலர்களை போல.....