அர்த்தம் உண்டு ராஜா👋

அலைகள் அடிப்பதால் தானே
கரைகள் அழகாகிறது...
கண்ணீர் கசிவதால் தானே
நகர்வுகள் நடைபோடுகிறது...
தமிழ் பிழைப்பதால் தானே
மழலை மணமாகிறது...
வாழ்கை வளைவதால் தானே
வரமும் வரவாகிறது...
நொடிகள் உடைவதால் தானே
நினைவுகள் நித்தியமாகிறது...
இரவுகள் குருடாவதால் தானே
விடியல்கள் விலையாகிறது...
ஓட்டங்கள் இருப்பதால் தானே
இரத்த ஓட்டமும் பொழிவாகிறது...
மாற்றங்கள் வருவதால் தானே
நாளையும் நயமாகிறது....
தோல்விகள் தொடர்வதால் தானே
வெற்றிகள் இனிப்பாகிறது..
விதி விளையாடுவதால் தானே
முதலின் அர்த்தங்கள் முடிவாகிறது...
(இஷான்)

எழுதியவர் : இஷான் (15-Jan-20, 4:09 pm)
பார்வை : 182

மேலே