வாழ்த்துக்கள் என்பது சரியான பாடமா அல்லது வாழ்த்துகள் என்ற பதம் சரியா
ஒவ்வொரு பண்டிகைக்கும் நாம் வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் . நம்முடைய மரபும் கூட .வாழ்த்துக்கள் என்ற வார்த்தை சரியா அல்லது வாழ்த்துகள் என்ற வார்த்தை சரியானதா என்ற கேள்வி நம்முள் எழுகிறது .சரி அதற்கான பதில் மற்றும் அதன் சரியான இலக்கணம் என்ன என்பதை கீழே பார்ப்போம் .
அதற்கு முன்னால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .உ என்ற ஒசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா ?(பசு பந்து போன்றவை ).இவை தனது இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம் அதிகரித்து ஒலித்தால் அவை முற்றியலுகரம் .
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன .
நெடில் தொடர் குற்றியலுகரம் -- மாடு ,பாகு
ஆயுதத்தொடர் குற்றியலுகரம் -- எக்கு
உயிர்த்தொடர் குற்றியலுகரம் -- வரகு ,வரவு ,செலவு ,மிளகு ,சாக்கு
மென்தொடர் குற்றியலுகரம் -- சங்கு ,பங்கு ,பந்து ,அம்பு ,வம்பு
வன்தொடர் குற்றியலுகரம் --கொக்கு ,மக்கு ,பாக்கு ,சாக்கு ,
இடைத்தொடர் குற்றியலுகரம் --எய்து ,அல்கு
எந்த சொற்களுக்கு பின் க், ச் ப் என்ற மெய் எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி ?
இலக்கணம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம் ..
நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் புள்ளி வைத்த எழுத்து வராது . உதாரணம் மாடு ,ஆடு -- இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடு க்கள் ,மாடு க்கள் என்று வராது .
பசு, மரு ,கணு போன்ற குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் புள்ளி வைத்த எழுத்துக்கள் வரும் . உதாரணம் பசுக்கள் ,மருக்கள் ,கணுக்கள் .
குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது . செலவு ,வரவு --செலவுகள் ,வரவுகள் என்று எழுத வேண்டும் .
க் ,ச் ,ட்,த் ,ப் ற் போன்ற எழுத்துக்களுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது.
வாக்கு -- வாக்குகள்
கணக்கு --கணக்குகள்
நாக்கு -- நாக்குகள்
வாத்து -- வாத்துகள்
வாழ்த்து -- வாழ்த்துகள்
எனவே வாழ்த்துக்கள் என்பது தவறு .வாழ்த்துகள் என்பதே சரி .
தோப்புகள் என்றால் தோப்பு என்ற சொல்லின் பன்மை .
தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்காப்பட்ட கள் என்று பொருள் .
வாழ்த்துகள் என்பது வாழ்த்து என்ற சொலின் பன்மை .
நன்றி !