அங்க லட்சணம்
நதிக்கரையில் நான் பார்த்த அந்த
பாத சுவடுகள்..... என் மனதில்
ஆழ பதிந்தன ... அதன் சொல்லொணா
அழகால்.....
அந்த சற்றே மெலிந்த சற்றே நீண்ட அமைப்பால்
அதில் பதிந்த விரல் அழகால் .....அதில்
நான் கண்ட அவள் அங்க லட்சணங்கள்
இப்படித்தான் இருக்கும் என்று
நான் கற்பனையில் எண்ணிய அந்த அப்சரஸ்
அந்த பாத சுவடுகள் காணாமல் போக
அங்கே.... உயிரோடு என் கண் முன்னே
காட்சி தர என்ன கண்ணை என்னால்
நம்ப முடியாது போனதே ....
அங்க லட்சணம் உருவம் காட்டும்
அங்க லட்சண சாத்திரம் சொல்லுமே