பிரிவுகள் – கலாப்ரியா

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழேகட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

-----------------
Posted by hramprasath on April 23, 2010 ·

1 Comment



>கலாப்ரியா அவர்களின் பார்வையே தனி அழகுதான்,

.இளமுருகன்நைஜீரியா

எழுதியவர் : கலாப்ரியா (19-Jan-20, 3:35 am)
பார்வை : 46

மேலே