காதலியே காலை வணக்கம்

காதலியே காலை வணக்கம் 💥💐

காதலியே! கண்ணுறங்கியது போதும்,
கதிரவன் வந்துவிட்டான்,
காட்சிகள் மாறியதே அதற்கு சாட்சி.
காதலன் நான் உனக்காக கடற்கரை ஓரம் கவிதையுடன் காத்திருக்கிறேன்.
விந்தைகள் பல புரியும் கோல விழி உடையவளே!
விரைந்து வா!
வினோதமான காலை பொழுதுதை அனுபவிப்போம்.
சில்லேன்று இளங்காற்று வீசுகிறது.
சீக்கிரம் வா! சிலாக்கித்து அனுபவிப்போம்.
வானத்தில் கோலமென வட்டமிட்டு பறக்கும் பறவை கூட்டம்,
பார்ப்பதற்கு பவித்திரமானது.
பறந்து வா!
பாங்காய் அனுபவிப்போம்.
புதிதாய் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் புண்ணகைக்க,
புல்லரிக்கும் காட்சிதனை கான புன்சிரிப்புடன் வா கனிவுடன் அனுபவிப்போம்.
ஈர மணற்பரப்பில் ஓயாமல் விளையாடும் கடல் அலைகள் நம்மை அழைக்க,
இன்பமுடன் வா
நாமும் கால் அதில் பதித்து ஆடி பாடி அனுபவிப்போம்.
இயற்கை என்னும் பொக்கிஷத்தை பாதுகாக்க வா.
இயன்றவரை அதை இனிதாக்கி மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம் .
- பாலு.

எழுதியவர் : பாலு (22-Jan-20, 6:16 am)
சேர்த்தது : balu
பார்வை : 266

மேலே