காதல் ♥️♥️

காதல் 😘

உன் முந்தானையில் எனை முடிந்து முன்னூறு கவிதைகள் சொல்லி கொடுத்த முக்கனி சுவை கொண்ட தேன் சிந்தும் இதழாளே!
கயல் விழி கொண்டு
காளை எனை மயக்கி
காதல் மழை பொழியும் சின்ன இடையாளே!
மோகத்தை முன் நிறுத்தி
காமத்தின் கண் திறத்த இன்ப சுரங்கமே!
மழை மேகத்தால் மறைத்த முழு நிலவே!
சோலைக்குள் பதுங்கி நிற்கும் வண்ண மலரே!
காமதேவன் கட்டளைக்கு கட்டு பட்டுபடுவோம்.
வெட்கத்தை தவிர்த்து விடுவோம்.
ஆடைதனை தொலைத்து காம கலை பயிலுவோம்.
மோககடலில் முழுவதும் மூழ்கி நல்முத்தெடுப்போம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (22-Jan-20, 4:55 pm)
சேர்த்தது : balu
பார்வை : 264

மேலே