அல்குல் கலாச்சாரம்

அல்குல் கலாச்சாரம்


பெற்ற மக்களைப் பொத்தி வளர்த்தார்
பெற்றவர் அன்று சுற்றமும் கூடத்தான்
கண்ணில் பெண்ணை காட்டார் பெற்றோர்
கண்ணை காக்கும் கண்ணிமை யானார்
சிற்றின்பம் அன்று சிறியார் அறிந்திலர்
கல்யாண மாகாக் கன்னிதொட குற்றமாம்
கல்யாண மாகுமுன் பேசுதலும் குற்றமாம்
மணம்முடிந் துமறியான் மருவுதல் என்னவென்று
மணப்பெண் நிலையும் மாற்றில்லை அப்படியே
மௌடீகக் காலமே அன்று
மணவினை முன்பயிற்சி முடியா தன்றுமே

அன்றே சான்றோர் பதிவு செய்தார்
ஆண்பெண் அறிந்து செயல் புரிய
செதுக்கினார் சிலையில் கோயில் தோரும்
செதுக்கினார் சிற்றின்ப நிலையைத் தேரிலும்
செயல்முறை அப்போதும் அறிந்திலர் மௌடீகர்
குளிக்கும் குளப்படிக் கட்டிலும் அதேசிற்பம்
குறிகாட்டும் சிற்பம் குனிவில்லை
குறிகாட்டிக் குறிப்புணர்த முயன்றார் பாரே

குறிகாட்டும் சிலை பழிக்கும் பேதைகாள்
குறிநோக்கம் இனஉற் பத்தி வேறென்ன
குறிபார்த் தறியா வெகுளிகள் அன்று
அறி யாப் பிள்ளைக் கின்று பெற்றோர்
அரிய ஆன்ராய்டு தந்தார் வாங்கி
சொறிந்து சொறிந்து நீலப்படம் தேடுகிறார்
அவளோ தனதக்குள் அல்குலை செல்பியில்
அந்நியர்க் கனுப்புவள் குஷியாய்
அநியாயக் குக்கலோக் கோயிலைப் பழிப்பதேன்

எழுதியவர் : பழனிராஜன் (24-Jan-20, 3:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 115

மேலே