வலிக்கின்ற என் இதயம் 555

கண்மணியே...



என் இதயம்
வலிக்கும்
போதெல்லாம்...



நான்
துடிக்கிறேன் உனக்காக...



விண்ணில் நிலவை
பார்க்கும் போதெல்லாம்...



வந்து வந்து செல்லுதடி
உன் நினைவுகள்...



ஊரெல்லாம் சுற்றி திரிந்தேன்
கோவில்காளை போல...



வீட்டிற்கு அடங்காதவன் ஊரில்
அடங்குவான் என்பார்கள் உண்மைதான்...



நீ என்னை
வெறுத்த போதும்...



அடங்காத காளையாக
உன்னையே சுற்றி வந்தேன்...



நீ எளிதாக அடக்கிவிட்டாய்
உன் தந்தையை வைத்து...



ஆறாத ரணமாக என்னில்
நீ பதிந்துவிட்டாய்...



மண்ணில்
நான் புதைந்தாலும்...


என்னில் புதைந்த உன்
நினைவுகள் என்றும் மறையாதடி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (26-Jan-20, 5:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1548

மேலே