செயம் =======

இறைதொழு. குறைவிடு. இளகிய மனமெடு
இனிதுள மனிதரி லிணைவாயே
நிறைமதி முகமெடு நிதமத னொளிபட
நிலமுள விருளது கலைவாயே
சிறையடை படுகிற நிலைவர விடுதலை
சிறகென வுனைவிரி சிறப்பாயே
முறையொடு தினசரி விடிகிற பொழுதென
முடிவெத னிலுமெடு செயிப்பாயே
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jan-20, 2:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 70

மேலே