செயம் =======
இறைதொழு. குறைவிடு. இளகிய மனமெடு
இனிதுள மனிதரி லிணைவாயே
நிறைமதி முகமெடு நிதமத னொளிபட
நிலமுள விருளது கலைவாயே
சிறையடை படுகிற நிலைவர விடுதலை
சிறகென வுனைவிரி சிறப்பாயே
முறையொடு தினசரி விடிகிற பொழுதென
முடிவெத னிலுமெடு செயிப்பாயே
**