காதல்2020

அன்பே உன்
கண்களைக் கண்டதும்
கணத்தில் மனம்
கனப்படுவதேன் - எதனால்?

மலரே உன் வாசமோ!
உன் சுவாச சீண்டலொ!
என் மெய் வருடும் கூந்தலோ!

முந்திரி மூக்கோ!
செங்காந்தள் செவியொ!
மல்லிகைகச் சிரிப்போ!
ரோஜா இதழோ!

அன்ன நடையோ!
சின்ன இடையோ!
சிட்டு விரல்களோ!
பட்டுப் பாதங்களோ!

மனமோ!
குணமோ!
உதிரத்தில் கலந்த
உணர்வோ!

என்னுள்ளம்
உனைத்தேடும்!
உறவில்லையெனில்
உயிர்மூடும்!

எழுதியவர் : இராம்குமார்.ப (7-Feb-20, 8:44 pm)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 184

மேலே