உணர்ச்சிகளற்ற பாறை என் உடல் 555

என்னுயிரே...



நாம் காதல்
கொண்ட நாட்களில்...



நான் செய்யும் தவறுகளுக்கு
அடிக்கடி நீ சொல்வாய்...


உன் தலையில்
களிமண்ணா இருக்கு என்று...


தெரிந்து சொன்னாயோ தெரியாமல்
சொன்னாயோ தெரியவில்லை...


இன்று நிஜமானது நீ
சொன்ன வார்த்தைகள்...


என்னை நீ
பிரிந்து சென்றதும்...


தலையில்
மட்டும்தான் களிமண்...


உடல் முழுவதும் பாறைதான்
உணர்ச்சிகள் இன்றி...


பாறைகளில் உன்னை
சிற்பமாக
செதுக்கிவிட்டேன்...


களிமண்ணில் உன்
உருவமே மண் சிலையாக...


மண்ணில் புதைத்தாலும்
இந்த கருங்கல் சிற்பம்...


என்றும்
சிதையாதடி
என்னுயிரே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (9-Feb-20, 8:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1183

மேலே