காதல்

பிரம்மன் கற்பனையின்
கடைசி துகளே
நான் கண்டுகொண்ட
என் உலகின் உயிரே ...
காதோரம் சூடும் பூக்கள் எல்லாம்
உன் முகம் கண்டு வெக்கத்தில் மலராமல் மூடிக்கொள்கிறது ..
விழி இடையில் மாட்டிக்கொண்ட உன் நெற்றிபொட்டு
எத்தனை முறை செத்து பிழைக்கின்றன
உன் உதடுகள் தீண்டும் வார்த்தைகள் எல்லாம்
மறு பிரசவம் எடுக்கிறது
நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும்
என் விழி அலைகள் ஓயாமல் அதிர்கின்றது
ஒரு கணம் நான் உன்னை மறந்தாலும்
என் இதயம் ஓராயிரம் முறை உன் பெயரை உச்சரிக்கின்றன
என்றும் என் நினைவாகவும் ,
நிஜங்களிலும்
துணையாக நீ நிழல் போல நீ வர வேண்டும்

எழுதியவர் : செந்தில் குமார் அ (14-Feb-20, 1:19 pm)
சேர்த்தது : sendil
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே