பாதையின் ஓரத்தில்

பாதையின் ஓரங்களில்

சுள்ளென்று சுட்டெரிக்கும்
வெயில் கூட
சுகமாய் தெரிகிறதோ
இந்த காதலர்களுக்கு !

பல பேர் செல்லும்
பாதையின் ஓரத்தில்
முதுகை காட்டி
உட்கார்ந்து விட்டால்
யாரும் இவர்களை
பார்ப்பதில்லை என்ற
எண்ணம் !

கேட்பதற்கு நீ யார்?
எங்கள் உரிமை
அவ்ர்கள் சொன்னாலும்

சற்று திரும்பி பார்த்தால்
அவர்கள்
தந்தை தாய்மார்கள் கூட
அந்த பாதையில்
இவர்களுக்காக
மாடாய் உழைத்து
கொண்டிருக்கலாம்… !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Feb-20, 4:28 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 97

மேலே