இலையைத் தின்னும்

துன்பத்தையும், துயரத்தையும்
தோளில் சுமக்கும்போதே
ஆலமர விழுதினைப்போல்
தாங்கிக்கொள்ள
சிறு வயதிலேயே பிள்ளைகளிடம்
சொல்லி வளர்த்தால்
பெற்றோரை கைவிடுமா
பிள்ளைகள் !

சிவபெருமானுக்கும்
சிறு வயதில் சொன்னார்களோ 1
வாழும் மக்களின் நலம் காக்க
விஷத்தைத் தானுண்டு-- அமுதத்தை
பிறருக்குக் கொடுத்தான்
அதுபோல எருதையும்
தன் பிள்ளையென
சொல்லி வளர்த்தானோ !

தானியத்தை நமக்கு
தரும் எருதோ வைக்கோலை
தானுண்ணும்,
அரிசியை கொடுத்து விட்டு
உமியை எடுத்து கொள்ளும்
கவலைபடாது-- நமக்குக்
களைந்த அரிசியை தரும்
கழுநீரைக் குடிக்கும்

சமையல் முடிந்ததும்
சுடு சோற்றை நமக்கு தந்து
ஆறிய கஞ்சியைத்தான்
அருந்தும் எருது,
பண்பாடு குறையாம
பரிமாறும் சாப்பாட்டை
எல்லோருக்கும் தந்து விட்டு
எச்சில் இலையைத் தின்னும்

எழுதியவர் : கோ. கணபதி. (16-Feb-20, 11:44 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 70

மேலே