உபதேசம் - தூரதேசம்
அம்மா வந்தாா்
மகனிடம் இருந்த கைபேசியை
வாங்கிவிட்டு படி என்றாா்...
அப்பா வந்தாா்
மகளிடம் இருந்த கைபேசியை
வாங்கிவிட்டு படி என்றாா்....
அம்மா-அப்பா இருவருமே
அவர்தம் பிள்ளைகளருகே -உடன்
அமர்ந்து படிக்க தொடங்கினாா்கள்...
கைபேசியின் - புலனத்திலும்
முகநூலிலும் வந்த தகவல்களை......
இப்படித்தான் உபதேசம் என்பது
சிலருக்கு எப்போதும் தூரதேசம்
சிலருக்கு மட்டுமே கைவசம்....!
- நளினி விநாயகமூர்த்தி