வேலண்டைன் 2

அழல் நெய் கலிங்கம்.

=============================================



குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்

வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்

கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு

நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்

குறி இடம் விரைய மெல் இறை நெகிழ

அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌

கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்

ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை

அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌

நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.

"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான்

ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.


========================================ருத்ரா

அன்பு நண்பர்களே

சங்க நடைத் தமிழில் "வேலண்டைன்" விழா
கொண்டாடும் தலைவியும் தலைவனும்
இதோ இங்கே உலா வருகின்றனர்.
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
சொல்லாத காதல் நுண்சொற்களா ?
காதலில் தான் தோற்பது என்பது வெல்வதும் ஆகும்.
வெல்வது என்பது தோற்பதுவும் ஆகும்.

--------------------------------------------------------------------ருத்ரா

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (16-Feb-20, 11:02 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 44

மேலே