காதல் ♥️♥️

காதல் ♥️♥️

என் அருமை காதலியே
காலை வணக்கம்.
இன்றைய காலை
மழையுடன் தொடங்கியது.
அதனால் ஆனந்த மழை வணக்கம்.
சாலரத்தின் வழியே அந்த சோலை வனத்தில் பொழியும் மழையை ரசிக்கிறேன்.
ஒவ்வொரு மழை துளியிலும் நீ தெரிகிறாய்.
என் குடை கம்பியில் இருந்து வடியும் நீர் துளியிலும் நீயே சிரிக்கிறாய்.
அந்த மரத்தின் இலைகளில் இருந்து வடியும் நீர் துளியிலும் நீயே ஒளிர்கிறாய்.

காதலே, என் உயிரே, மழையேனும் மகோன்னதத்தை அனுபவிப்போம் வா.
மழையில் நினைந்து அந்த மலை உச்சிக்கு செல்வோம் வா.
இயற்கையின் உண்ணதத்தை உணர்வோம் வா.

மழையில் நினைந்த மலரே
உன் இதழ்களில் இருந்து வடியும் மழை நீர் துளியை நான் துடைக்கவா
அல்லது சுவைக்கவா
மிதமான மழை
குளிர்ந்த காற்று
மலையின் உச்சம்
அருகில் அழகு தேவதையாக நீ
இதை விட காதல் செய்ய இடமுள்ளதோ
உன் கண்கள் சொல்லும் சமிக்கை
உன் உடல் மொழியின் மாற்றம்
என்னை உன்னை நெருங்க செய்கிறது
தடை ஏதும் சொல்லாமல் உன் இடை இடம் கொடுக்க
ஆணின் ஆரவாரம் அற்புதமாக தொடங்க
பெண்ணின் வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற
இனிதே ஆரம்பம் இரு உயிர்களின் இன்ப பயணம்
மலை உச்சம் அடைந்த குயில்கள்
காம கோட்டையை அடைந்து
வாலிப விருந்தை உண்டு
சிற்றின்ப சிந்தாந்தத்தை பழகினர்.
மானுடம் மழைக்கு நன்றி சொன்னது.

பாலு.

எழுதியவர் : பாலு (17-Feb-20, 8:09 pm)
சேர்த்தது : balu
பார்வை : 170

மேலே