அன்பு கொடு அன்பே
குளிரில் இறுகும் பனிபோல
நெஞ்சில் படர்ந்து கிடக்கிறாய் நீ
உன் நினைவால் நானிங்கு
உறைந்து போகிறேனடி
உன் அன்பின் உச்சி வானக் கதிர்களை
எனக்காக நீ அள்ளி வீசிவிடு கண்ணே
உன்னால் கொடுகும் என் நெஞ்சம்
கொஞ்சம் உஷ்ணக் கதகதப்பு பெறட்டுமே
அஷ்றப் அலி