சிலநொடிகளில்

நின்ற இடத்தில் இருந்து
நகராது நிலைத்தேன்

நினைவுகள் தடுமாற ஏன்
என அதிசையத்தேன்

இப்படியான அனுபவம் உண்டா
என யோசித்தேன்

இல்லை என்ற விடைக்கு பின்
நான் மலைத்தேன்

மெல்லிடையாள் கண்ணைவிட்டு
மறைய மனதால் துடித்தேன்

உணர்வுகள் உதைபட்டு திரும்ப
எனக்குள் சிரித்தேன்

சிலநொடிகளில் ஏற்பட்ட அந்த
நிகழ்வை எண்ணி ரசித்தேன்

எழுதியவர் : நா.சேகர் (19-Feb-20, 7:05 am)
Tanglish : silanodigalil
பார்வை : 1178

மேலே