அவள் அழகு
மெய்யாலும் சொல்கின்றேனடி என்னவளே
உந்தன் அழகு என் எழுதுகோலில் உயிர்துடிப்பாய்
மையாய் மெய்யாய் மாறிஎன்னையும் எழுதவைத்தது
கவிஞனாய் மாற்றி உன் அழகிற்கோர் கவிதை , அதுவே
' இவ்வுலகில் அழகாய் காட்சி தரும் ஒவ்வோர்
பொருளிலும் உன்னைக் காண்கின்றேன் நான்'