அழகிய காதலனே

அழகிய காதலனே. . .
ஊமையாகி போகின்றேன்
உன்னருகில் இருக்கையில் மட்டுமே
சொல்லத்துடிக்கும் வார்த்தைகளெல்லாம்
சொக்கி தொக்கி நின்று விடுகிறது
சுற்றும் உன்விழிகள் காண்கையில்!
தேடி வருகிறேன் காதலை சொல்ல
திக்குவாயாகின்றேன் திக்குமுக்காடுகின்றேன்
தூயவனே உன் முன்னால்
என்ன மாயம் செய்தாயடா
உள்ளுக்குள் ஏராளமா நீரூற்று
உன்வாசம் படுகையில்!
ஆண்கள் கர்வம்தான் - நீயோ
ஆணவகர்வத்துடன் கம்பிரமாய்
கன்னியென்னை கட்டி இழுக்கின்றாய்
ஏறுதழுவும் உன் கரங்களில்
எப்போது தான் ஏக்கத்தில் நான் !
கண்ணுறக்கம் கலைக்கின்றாய்
கன்னியுருக வைக்கின்றாய்
அங்கையென் காதல் சொல்கின்றேன்
செங்கை அழகனே. . .
சொன்னதை ஏற்றக்கொள் -இல்லை
நீயே என்னை கொல்
மாய்ந்தாலும் உன்நினைவில்
வாழ்வேன் உன் கனவில்!
இவன் மு.ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (19-Feb-20, 3:58 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : alakiya kathalane
பார்வை : 81

மேலே