மலையின் கவலை
மலையின் கவலை !
முழுவதுமே வழுக்கையாய்
மாறிப்போன மலைக்கு
பச்சை நிற
மயிர் வளர்க்க ஆசை
பெய்யும் மழை எல்லாம்
வழுக்கிட்டு செல்வதால்
பச்சை மயிர்களின்
வேர்கள் ஊன்றி வளர
முடிவதில்லை.
எங்கெங்கோ பாறைகளை
வெட்டி கட்த்துபவ்ர்கள்
இங்கு வந்து கொஞ்சம்
செதுக்கி விட்டால்
அந்த இடத்தில் பச்சை
மயிர்க்ளாய் மரங்களோ
புற்களோ, செடிகளோ
வளர்ந்து விடும்
வழுக்கை
மலை என்ற பேராவது
மறைந்து விடும்.