கனவில்லா வாழ்வு

சில கனவுகள் கூட
நிஜங்கள் போல
வலி கொடுக்கும் வாழ்வில்
நிஜங்களே கனவுகளாய்
கலைந்து போகும் மாயம்

உணர்வுகளைப் பிழிந்து - சுடு
நெருப்பிலிட்டு எரித்து விட்டு
உடலம் மட்டும் வாழ்கையிலே...
கனவுகளுக்கு இடமேது..

எழுதியவர் : தெய்வ ஈஸா (21-Feb-20, 8:43 pm)
பார்வை : 240

மேலே