அஞ்சாதே
மாற்றங்கள் தான்
வாழ்க்கை என்றால்
ஏமாற்றங்களை
கண்டு ஏன்
அஞ்சுகிறாய் மனிதா!
நீ வற்றாத நீருற்றாய்
வாழ்க்கையை வகுத்து
வகை வகையாய்
செயலாற்று!
உன் ஆற்றலின்
பொலிவும்
அறிவின்
தெளிவும்
செயலாற்றிட
செலவில்லா முதலீடு;
தோல்விகளை
ஏற்றுக்கொள்;
வெற்றிகளை
துவக்கி நில்;