ஒரே வாழ்க்கை
காரியங்கள் சாதித்துக்கொள்ள
பொய்யாய் சிரிக்கிறேன்
அழுவதுபோல் நடிக்கிறேன்
உண்மையாய் கோபப்படுகிறேன்
பலநேரங்களில் தேன்தடவிய
வார்த்தைகளால் நயமாய் பேசி
ஏமாற்றவும் செய்கிறேன்
வஞ்சமாய் புகழ்கிறேன்
வாஞ்சையாய் அரவணைக்கிறேன்
விருதுகள் பல வாங்க
எல்லோருடனும் போட்டிபோடுகிறேன்
எதுவும் எப்படியோ போகட்டும்
என் வாழ்வை தக்கவைப்பதற்காகவே
அனைத்தையும் செய்கிறேன்
எதிர்வினைகளையும்
நானே அனுபவிக்கிறேன்
ஒன்றை அடித்துதான் ஒன்று
வாழமுடியும் என்கிற இயற்கையின்
நியதியில் நெறிபிறழாமல் வாழவே
முயற்சிக்கிறேன் நானும் ஓர்
உயிரினம் என்பதால்......