காதல்

அவள்......
' அன்பே உன் மடியில் தலை வைத்து
இப்படி உன் கைகளின் வருடலில்
இன்று நான் இன்புற்றிருக்க என் மனதில்
அடி மனதில் ஓர் எண்ணமும் உருவாயிற்று
அதுதான் நாளை முதுமையிலும் இப்படியே
நான் உன் மடியில் தலை வைத்து உன் அன்பு
கரங்களின் அரவணைப்பிலேயே .. அணைந்திட
விரும்புகின்றேன்.' அவன் ,....' போதுமடி கண்ணம்மா
நீ அறியாய் ..... அப்படி நீ நினைத்திருக்கும்போதே
என்னுயிர் உன்னில் கலந்துவிடும் முதுமையில்'
என்றான் ,
நீ இன்று நான் ஏதடி தங்கமே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Feb-20, 8:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 185

மேலே