தமிழ் இலக்கியங்களில் பெண்களில் சமூக நிலை

தமிழ் நாட்டில் பழங்காலத்தில் ,தற்காலத்தில் பெண்களின் நிலை அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற வட மாநிலங்களில் பெண்களில் நிலையை விட என்றும் நன்றாகவே இருந்திருக்கின்றது ,தற்போதும் இருக்கின்றது என்று சொல்லலாம் தாராளமாக .

தமிழகத்தில் பெண்கள் 100 % நன்மதிப்போடு இருக்கிறார்கள் என்று கூற முடியவில்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நன்மதிப்போடும் முன்னேறியும் இருக்கிறார்கள் மற்ற இந்திய பகுதிகளை நோக்குகையில். தமிழ் காப்பியங்களில் தமிழ் பெண்கள் வாழ்ந்த விதம் அவர்களின் உரிமைகள் வடநாட்டு காப்பியங்களோடு ஒப்பிடுகையில் மிக நன்றாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை .

ராமன் தன மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான் .தீயில் இறங்கி தான் பத்தினி என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பணிக்கிறான் . அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங்காட்டி கர்ப்பிணியான தன மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன் . அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள் .இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்.இது இராமாயணம் .

ஓர் அழகிய இளம் மங்கை , அவளுக்கு முதிர்ந்த கணவன் , மனமுவந்து வாழ்கிறாள் . ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான் . கடன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை . பண்ணாத குசும்பெல்லாம் அக்கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள் . ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான் ,அதற்கும் அவள் இசைகிறாள் . தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள் .தன கணவனை தோளில் தூக்கிச்சென்று தாசியின் வீட்டில் விடுகிறாள் . இது நளாயினின் கதை .

இது அனைத்தும் வடமொழி இலக்கியங்கள் ..

தன் கணவன் செய்யாத குற்றத்திற்காக கொலைசெய்துவிட்டது அரசு .தன் இடப்பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சசல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள் . ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பிப் பார்க்கிறாள் ,அனைத்தும் எறிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா என்று ..

இது சிலப்பதிகாரம் .

அவள் ஒரு பேரழகி ,அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வழக்காதில் வாங்கி இடக்காதில் வீசிவிட்டு நடக்கிறாள் . அவனும் ஆசிட் வீசவில்லை ,ஆபாசபடமெடுத்து மிரட்டவில்லை .அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான் .

இது மணிமேகலை

அவள் கணவன் அவளை கொல்வதற்கு திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான் .அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள் .மலை உச்சியை எட்டியதும் தெரிகிறது 'இவன் தன்னை கொலை செய்ய அழைத்த்த்து வந்திருக்கிறான் என்று . யோசிக்கிறாள் ,இறுதியாக கணவனிடம் பேசுகிறாள் "நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய் ? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை . ஒரே ஒரு வேண்டுகோள் தான் .என் கணவர் நீங்கள் உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் கிடைக்கும் எனக்கு என்று .

அட அதனாலென்ன > தாராளமாக சுற்றி வா " என்று கணவனும் சொல்ல அவளும் சுற்றுகிறாள் . முதல் சுற்று , இரண்டாம் சுற்று ,மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள் ..

இது குண்டலகேசி ..

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது வடமொழி இலக்கியங்கள் .

அவன் ஆணோ , அரசனோ ,கணவனோ ,ஆண்டவனோ ,அநீதி என்றால் ,அறம் தவறினால் அடங்காதே ,அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பது தான் தமிழ் இலக்கியங்கள் .


தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுது .

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குது .

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்குக் கீழே வைத்திருந்த காலகட்டத்தில் பெண்களை மேன்மை மிகு புதையலாக போற்றியது ,புகழ்ந்தது தமிழ் சமூகம் .

பெண் சங்ககாலத்திலேயே 47 பெண் புலவர்களை கொண்டிருந்தது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான் .உலக மொழிகளின் தாய் என்று கூறிக்கொள்ளும் கிரேக்கத்தில் கூட ஏழு பெண் எழுத்தாளர்கள் தான் உண்டு .


தேவபாஷை என்று கூறிக்கொள்ளும் சம்ஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது .ஏன் ?சம்ஸ்கிருதத்தை வாசிக்கவோ ,பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது .

அனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்த தங்கத்திலும் ,பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொறித்து புழகுமளவிற்கு தமிழ் கலாச்சாரம் இருந்தது . ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் சமூகம் .

தமிழ் , தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் .பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள் ,அவர்களை கொண்டாடுவோம் !

எழுதியவர் : வசிகரன்.க (22-Feb-20, 10:38 pm)
பார்வை : 232

சிறந்த கட்டுரைகள்

மேலே